பாலமுனை சீட்ஸ் (Seeds PreSchool- Palamunai) அமைப்பினால் கடந்த 28 வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்ற, சீட்ஸ் பாலர் பாடசாலையின் 2025 /26 வருடாந்த விடுகை விழா, சீட்ஸ் அமைப்பின் தலைவர் கவிஞர் AG.பஸ்மில் - SLEAS (பிரதிக் கல்வி பணிப்பாளர்) அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை Shara Beach மண்டபத்தில் மிக விமர்சையாக (2026.01.10)இடம் பெற்றது
நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ASM. உவைஸ் அவர்களும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகளின் பணியக பணிப்பாளர் MA. அமினுதீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கௌரவ அதிதிகளாக ஆரம்பக் கல்வி பிரிவிற்கு பொறுப்பான உதவி கல்வி பணிப்பாளர் AL. பாயிஸ் (Mps), அட்டாளச்சேனை தேசிய பாடசாலை அதிபர் ALM. பாயிஸ் SLPS, ஆசிரிய ஆலோசகர் AS. நஜாத், ஓய்வு நிலை அதிபர் SMM. ஹனிபா, சீட்ஸ் தவிசாளர் B. முஹாஜிரீன் SLPS, அதிபர் MR. மிஸ்பர், IA. சிறாஜ் MPS, சீட்ஸ் அமைப்பின் பிரதித் தலைவர் SH. தம்ஜீத் (JP, CEO), சொகொமொ நிறுவன பணிப்பாளர் MR. றியாஸ், ILM.முனாஸ் GN, சீட்ஸ் பொருளாளர் MH. நிசார்தீன் Tr மற்றும் சீட்ஸ் நிருவாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு பாலர் பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசீல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் பாலர் பாடசாலை ஆசிரியைகளான AU.மர்ழியா, AK.றபுசானா மற்றும் I. ஹூஸ்னா ஆகியோருக்கான விசேட பாராட்டுக்களும் வழங்கி வைக்கப்பட்டன.










கருத்துகள் இல்லை